Saturday, 25 October 2014

ஜென் கதைகள் 2


நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? 

ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு  ஐக்யூ  பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .
ஐவரையும் நோக்கி ” நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? ” என்று வினவினார். ” அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா ” முதலாமவன் பதிலளித்தான்.
அவனைத்தட்டிகொடுத்து ”நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் ” என்றார் ஐக்யூ  .
இரண்டாவது சீடனோ ” நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா
அவனை அருகில் அழைத்து ” உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் ” என்றார்.
மூன்றாவது சீடன் ” ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ”
குரு தன் கண்கள் விரிய ” அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது” என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.
நான்காவது சீடன் ” நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா ” என்றான்
ஐக்யூ  மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி ” நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா ” என்றார்.
ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் ” என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! ” என்றான் .
ஐக்யூ அவன் காலில் விழுந்து ” ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் ” என்றார்.
**************************************************
இந்த மென் பொருள் வேலைக்கு வந்ததற்குப் பிறகு பல நேரங்களில் வருகிற சந்தேகம் நாம் என்ன செய்கிறோம். எதை யொ நினைத்து எதையோ செய்து வேறொன்றை விற்கிற நிலைமைத்தான்..
சமகாலத்துக்கு பொருந்திப் போகிற கதை..
சாப்பிடுகிற நேரத்தில் சம்பளத்தையும் வேலை செய்கிற நேரத்தில் வேறு எதையாவதையும் நினைத்து கொண்டே எல்லாவற்றையும் கோட்டை விடுகிற மனோபாவம் நமக்கே நமக்கென இருக்கிற வரம்.
என்ன செய்ய ?

ஜென் கதைகள் 1

கவனி!கவனி!!


ஐக்யூவை ஒரு மனிதன் அணுகி “ உங்களது பெரிதான ஞானத்திலிருந்து சில வார்த்தைகளை எழுதித் தர முடியுமா?” எனக் கேட்டார்.
ஐக்யூ தனது எழுதுகோலை எடுத்து “ கவனி” என எழுதினார்.
“இவ்வளவுதானா?” இது வந்தவர்.
ஐக்யூ திரும்பவும் “கவனி, கவனி” எழுதினார்.
“நல்லது” என சொல்லியபடியே “இதிலே ஒன்றும் ஞானத்தின் ஆழம் இருப்பதாக படவில்லை குருவே” என இழுத்தார் நம்மவர்.
இப்போது ஐக்யூ திரும்பவும் மும்முறை எழுதினார். “கவனி, கவனி, கவனி”.
இப்போது அந்த மனிதன் கோபம்மேலிட்டவனாய் “அப்படி அந்த கவனி என்ற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம் ? “ என கத்தினார்.
“ ‘கவனி’ என்றால் ‘கவனி’ எனப் பொருள்” என்றார் ஐக்யூ.
- Source The Little Zen Companion


இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்?


கடும் மழை நாளிலே, ஐக்யூ சங்கூ என்ற இரண்டு சென் குருக்கள்  ஒரு சேறும் சகதியுமான சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். சாலை முழங்கால் மட்டம் சேறால் நிரம்பியிருந்தது. பட்டாடை உடுத்தியிருந்த ஒரு பெண் சாலையைக் கடக்க முடியாதவளாய் நின்றிருந்தாள். ஐக்யூ “வா பெண்ணே” என அழைத்து அவளை தோளில் சாய்வித்தவராய் சாலையைக் கடக்கும் மட்டும் கொண்டு விட்டார். சங்கூ எதுவும் பேசவில்லை. அமைதியாக வந்தவர் இரவு தங்கும் விடுதியை அடைந்த உடன் ஐக்யூவிடம் “ அது எப்படி ஒரு சென் குரு அதுவும் வயதில் குறைந்தவர் ஒரு வாலிப பெண்ணை தொட்டு தூக்கலாம்? “ என வினவினார்.
ஐக்யூ பதிலுக்கு “நான் அவளை அங்கேயே இறக்கி விட்டுவிட்டேன. ஆனால் நீங்கள் இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்? “



Saturday, 18 October 2014

மனம் - புரிதலும் புரிதல் நிமித்தமும் 2

உள்ளும் புறமும் - 2
புரிதலும் புரிதல் நிமித்தமும்  2
"ஐயோ ! ஸாரிங்க,, தெரியாம பண்ணிட்டேன்!!"
"நான் ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல ?"
"எனக்கு என்னமோ ஆயிடுச்சு .."
"அவர் ரொம்ப தங்கமானவர் தான்.. ஆனா கோவம் வந்தா என்னப் பண்றோம்னு அவருக்கே தெரியாது .. அப்படிதான் போன வாரம்  . #@%$#,,,"
"ஐயோ அவர் அப்படிப்பட்ட ஆளு இல்லிங்க!! என்ன ஆச்சுனே தெரில திடிர்னு பைத்தியம் புடிச்ச மாறி நடந்துகிட்டார் ?"
இந்த மாதிரி வரிகளை உங்கள் காதுகள் தினம் தினம் கேட்டு இருந்திருக்கும்
அட ஏங்க.. எத்தனையோ சமயங்களில் நாமே  ஒரு மாதிரி நடந்துக்கொண்டு  " அடடா  இப்படி பண்ணிட்டோமே ! நாம ஏன் இப்படி நடந்துகிட்டோம்நு ?? !! "ஆச்சரியப்பட்டிருப்போம் ..

“மனிதன் ஒரு தர்க்க சக்தியுள்ள பிராணி” என்று உலகமே நம்பியிருந்தற்கு மாற்றாக வேறொன்றை ஒரு நல்ல நாளில் விவரமாக விளக்கினார் ஒரு வயதான வாலிபர். நம்மவர் ஸிக்மண்ட் ஃப்ராயட் என்ற உளவியலாளர். அப்படி என்னதான் சொல்லியிருப்பார் இந்த மனிதர் ?

மருத்துவ படிப்பை படித்துவிட்டு மனநோயாளிகளுக்கு சிகிட்சை பார்த்து கொண்டிருந்த ப்ரோய்ட்க்கு ஒருவர் மனநோயாளி ஆவது பற்றி ஏன்? எதற்கு? எப்படி என்பது போன்ற கேள்விகள் வந்தது. ஆரம்பித்தார் ஆரய்ச்சியை.

அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தார் — நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நடந்த சில முக்கியமானசம்பவங்கள் நமக்கு வயது வந்த பின் நமக்குத் தெரியாமலேயே நம்மை இயக்குகின்றன. சிறு வயதில் நடக்கும் சமபவங்களை நாம் மறந்துவிட்டோம் என்றுநாம் நினைத்தால்கூட நமக்கு தெரியாமல் அவை நமது ஆழ்மனதில் பதிந்திருந்து நம் சிந்தனைகளை இயக்குகின்றன.இத்யாதி இத்யாதி விசயங்கள் ..

சுருங்க சொல்லுவோமானால்,
நம் எல்லோருக்கும் மனதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
1. வெளிமனம்- நினைவு மனம் - புறமனம். (Conscious Mind)
2. உள்மனம் - ஆழ் மனம், சப் கான்ஷியஸ் மைண்ட். (unconscious Mind )
சரி விஷயதுக்கு வருவோம். மனிதனிடம் உள்மனம் வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது என கூறினேன். எதுக்கு இரண்டு மனம் ஒன்று பத்தாதா? என நீங்கள்  நினைக்கலாம்.. எதற்குமே காரணம் இல்லாமல் இல்லை இரண்டிற்குமே தனி தனி  வேலைகள் இருக்கின்றது.
இந்த வெளிமனம், வெளியுலகோடு நாம் செம்மையான முறையில் தொடர்பு கொள்ளவும் அன்றாட வாழ்வை நாம் தொந்தரவில்லாமல் வாழவும் செயல்படுகிறது. நாம் பார்க்கிற கேட்கிற சாப்பிடுகிற மசாலாக்களை கட்டுப்படுத்துவது வெளி மனம்.  எங்கே எதை எப்படி பேச பழக செய்ய வேண்டும் என்பதிலிருந்து எல்லா விஷயங்களையும்  பொறுப்பாக பார்த்து கொள்கிற நல்லவர் இவர்.  பயம் வெண்டாம் ..

நம் அன்றாட வாழ்கையில் நடைபெறுகின்ற செயல்களை சேமித்து வைக்கின்றது.  ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து வைத்திருக்காது.தனக்கு தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில் மறந்து விடும்.  தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analyze,rational) தன்மை கொண்டது. வெளிமனம் என்று ஒன்று இருப்பதால் தான் நாம் நமது  வாழ்கையில் நடந்த துக்கமான நிகழ்வுகளையும் ,அவமானங்களயும் மறந்து சகஜமாக  வாழமுடிகின்றது.. என்ன சொல்கிறீர்கள்?.

உள்மனம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக்கணம் வரை நம் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களின் பதிவுகளையும் அடக்கியது. ( இது எப்படி சாத்தியம் ?.. நினைவுகள் பற்றிய பதிவில் பார்க்கலாம் ) உள்மனதின் சக்தி அபாரமானது. உதாரணமாக கடலில் மிதக்கும் பனிப்பாறை சிறிது மட்டும் வெளியே தெரியும். அது வெளிமனம். ஒரு மலையளவு பனிப்பாறை கடலுக்குள் மூழ்கியே இருக்கும் அது உள்மனம். இதை ஐஸ் பெர்க் அனாலஜி என்பார் ஃப்ராய்ட்.
உள்மனம் தூங்குவதில்லை. வெளிமனம் கண்மூடித் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருந்து வேலையை செய்கிறது . தூக்கத்திலும் கூடி மௌனமாக இயங்கி நம்மைக் காப்பதும் இதுவே.
உடலுறுப்புகள் முக்கியமாக உள்ளுறுப்புகள் வெளிமனதின் அறிவுக்கு அப்பாற்பட்டுத்தான் இயங்குகின்றன. இதயம் துடிப்பதும், மூச்சு விடுவதும் குடலும் வயிறும் சிறுநீரகமும் இயங்குவதும் அறிவுக்குக் கட்டுப்படா? வெளிமனம் உறங்கும்பொழுதும் இவை தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. உள்மனமே பயத்திலே மார்பைப் படபடக்க வைக்கிறது. உள்ளங்கைகளில் வேர்வையை ஆறாய்ப் பெருக்குகிறது. தொண்டை அடைக்கிறது.

புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பிடுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நிகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும் உள்மனமே நினைவுகளின் கருவூலம். நாம் பிறந்தது முதல் இன்று வரை நாம் அடைந்த அனுபவங்கள், அனுபவித்த அதிர்ச்சிகள், சோகங்கள், பயங்கள், சந்தோஷங்கள் எல்லாமே இந்த உள்மனம் என்னும் வங்கியில் இருக்கின்றன

ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே  ஊன்றுதல் போன்றன இந்த உள்மனது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு (Free from logical ,analyze, rational thinking) செயல்படுவதை விளக்கும்.
நம் உள்மனதில் இருந்து கொண்டே நம் சிந்தனைகளைப் பாதிக்கும் நமது குழந்தை பருவ ஞாபகங்களை தெரிந்துகொள்ள ஒரு வழிமுறையை ஃப்ராயட்கண்டுபிடித்தார். அந்த வழிமுறைதான் உளப்பகுப்பாய்வு (Mental Analysis ).

ஃப்ராயட் கொடுத்த கருத்துக்களும் மனநோயாளிகளை குணமாக்கும் வழிமுறைகளும் உளவியல் பற்றிய எண்ணங்களை பெரிதும் பாதித்தன. மனிதனைஇயக்கும் உள்மனம் அவர் கட்டுப்பாட்டுக்கு அடங்காதது என்ற எண்ணம் மனிதனின் தன்னைப் பற்றிய கருத்தை மாற்ற செய்தது. “மனிதன் அறிவு மிகுந்தபிராணி.”
ஆழ்மனதினைப் பற்றிய ஒரு அறிமுகப்படுத்துதே இப்பதிவின் நோக்கம் .. அதனால் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

New Intro for the Post

அதிசய எண் 21: ஒரு செயல் பழக்கமாக எத்தனை நாள்கள் தேவை? 21 என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். தொடர்ந்துஒரு செyal 21 நாட்கள் செய்யப்படுகிறபோது அது பழக்கமாகிறதாம்.  உதாரணமாக "அதிகாலை எழுதல்" என்பதைக் கொண்டால். அதை 21 நாட்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்(கடிகாரத்தின் அல்லது கட்டிய/கட்டப்போகிறவர்கள் உதவியோடு). 21 நாட்கள் நீங்கள் தொடர்ந்து செய்து விட்டால் 22 ஆம் நாள் நீங்கள் தானாகவே அதிகாலையில் கடிகார அழைப்பு இன்றி எழுந்து விடுவீர்கள். கடிகாரமே உங்களிடம் கேட்டுக் கொண்டுதான் மணி எழுப்பும்..
சரி சரி ..வழக்கம்போல இதுவும் ஹோம் வொர்க்தான்.. Enjoy ..:) ( Introduced by William James, Psychology Professor Harvard University)
–சகாயா