மன அழுத்தம் - Depression
மனச் சோர்வு என்பது ஒரு குணப்படுத்தக்கூடிய, கையாளக்கூடிய மன நிலைக் குறைபாடு. மனச் சோர்வின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை உளவியல் சிகிச்சையின்மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், சில தீவிரப் பிரச்னைகளுக்கு மருந்துகளும் உளவியல் சிகிச்சைகளும் தேவைப்படும் உதாரணமாக பசியில்லை, தூக்கமில்லை என்று சொல்கிறவர்கள், மிகவும் எதிர்மறையான அல்லது தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் போன்றோர்.
மனச் சோர்வின் சில பொதுவான அறிகுறிகள்: பெரும்பாலான நேரங்களில் சோகமாகவும் வெறுமையாகவும் உணர்தல், முன்பு அனுபவித்துச் செய்த வேலைகளில் இப்போது ஆர்வமில்லாமல் இருத்தல், தன்னை மதிப்பற்றவராக உணர்தல், குற்ற உணர்ச்சியோடு இருத்தல், அடிக்கடி அழுதல், தூக்கமில்லாமல் இருத்தல்/நிறைய தூங்குதல், நிறைய சாப்பிடுதல், பசியின்றி இருத்தல் மற்றும் தற்கொலையைப்பற்றி நினைத்தல்.
இந்தத் தீவிரச் சோக உணர்வு உங்களுடைய உறவுகளையும் பணிகளையும் பாதிக்கத் தொடங்கும்போது நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மிகவும் மன உறுதி கொண்டவர்களையும் மனச் சோர்வு பாதிக்கும். தன்னிடம் ஏதோ ஒரு பிரச்னை உள்ளதை ஏற்றுக்கொண்டு, அதைச் சரிசெய்ய நினைப்பதே நீங்கள் வலுவானவர் என்பதைக் காட்டுகிறது, நீங்கள் போராடி வெல்லத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைச் சொல்கிறது. உங்களுக்கு ஏதாவது ஒரு மன நலப் பிரச்னை இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து அதை உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் விவாதியுங்கள், ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
மனச் சோர்வின் சில பொதுவான அறிகுறிகள்: பெரும்பாலான நேரங்களில் சோகமாகவும் வெறுமையாகவும் உணர்தல், முன்பு அனுபவித்துச் செய்த வேலைகளில் இப்போது ஆர்வமில்லாமல் இருத்தல், தன்னை மதிப்பற்றவராக உணர்தல், குற்ற உணர்ச்சியோடு இருத்தல், அடிக்கடி அழுதல், தூக்கமில்லாமல் இருத்தல்/நிறைய தூங்குதல், நிறைய சாப்பிடுதல், பசியின்றி இருத்தல் மற்றும் தற்கொலையைப்பற்றி நினைத்தல்.
இந்தத் தீவிரச் சோக உணர்வு உங்களுடைய உறவுகளையும் பணிகளையும் பாதிக்கத் தொடங்கும்போது நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மிகவும் மன உறுதி கொண்டவர்களையும் மனச் சோர்வு பாதிக்கும். தன்னிடம் ஏதோ ஒரு பிரச்னை உள்ளதை ஏற்றுக்கொண்டு, அதைச் சரிசெய்ய நினைப்பதே நீங்கள் வலுவானவர் என்பதைக் காட்டுகிறது, நீங்கள் போராடி வெல்லத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைச் சொல்கிறது. உங்களுக்கு ஏதாவது ஒரு மன நலப் பிரச்னை இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து அதை உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் விவாதியுங்கள், ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
வாழ்வில் கடந்துபோன ஏக்கமும், நேசமும், கோபமும், வலியும் வாழ்வின் பல பரிமாணங்களைக் காட்டி மன எழுச்சியைத் தரும். ஆனால், இன்றைய தலைமுறையோ இப்படி எதையும் கடக்காமல், பணமும் பணம் சார்ந்த அசைவுகளுமாக வாழும் தட்டையான நகரத்து ஓட்டங்களுக்குள் சிக்கியிருக்கிறது; சிக்கவிடப்பட்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கவேண்டியது அவசியம். மனச்சோர்வு, மனஅழுத்தம் போக்க இதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
No comments:
Post a Comment