Thursday, 31 October 2013

கல்லான சிற்பியும் கண்ணாடி தேடும் மாணவனும்




கற்களைத் தேடியெடுத்து, கல்லதன் தன்மையறிந்து

கையிலே உளிபிடித்து, கவின்மிகு  நற்சிலை வடித்து ,

கற்சிலைகளைக் கையெடுத்துக் கும்பிட வைத்தார்கள்- சிற்பிகள் அன்று.


தேடலோடு தேடி வந்த கற்களுக்கு, ஓடி வந்து உதவாமல்

கையிலே உளிகொடுத்து, தன்னைத் தானே செதுக்க விட்டு,

ஒதுங்கி ஓரமாய் கைகட்டி நிற்கிறார்கள்  – இன்று.


முயற்சித்து முடியாமற்போன கல்லும்,

முறிந்து போன  கைகாலும் என

முழுக்க வீணாய்ப் போன கற்கள்

திரும்பின பக்கமெல்லாம் திகைக்க வைக்கின்றன.


சிற்பிகளே! சிற்பிகளே !!

உங்களால் சிற்பிகளாகி செதுக்க முடியாவிட்டாலும்,

கற்கள் தன்னைத்தானே பார்த்து செதுக்கிக் கொள்ள

கண்ணாடியாகவாவது    இருங்களேன்…!!!

நன்றி :
கரு- சகோ.ராஜன்

சிலை உதவி- கூகுளும் அதன் நண்பர் கமலக்கண்ணனும்.

No comments:

Post a Comment