குற்றப் பத்திரிக்கை வாசிப்பது
குதூகலத்தைத் தருகிறது எப்போதும்
படைத்தவனிடம் விடை கேட்பது
பலமடங்கு மகிழ்ச்சித் தருகிறது.
கடவுள் பேசிக்கொண்டிருந்த
கடந்தக் காலங்களில் ஒருநாள்
“இறைவா ,
படைப்பின் உச்சமென்றாய் என்னை
படைத்தது எல்லாம் எனக்கேயென்றாய்
கேட்பதற்கு நன்றாய் இருந்தது- கதைதானே
கேட்டும் வைத்தேன் மகிழ்வோடு - ஆனால்
கேள்வி ஒன்று துளைக்கிறது இன்று.
சிறப்புகள் பல பெற்ற எங்களால்
பறக்க முடியவில்லையே ?
சிட்டுக் குருவி என்னைப்பார்த்து
சிரித்துவிட்டு போகிறது அய்யா”
கேட்டு வைத்தேன் இந்த கேள்வியை
பதில் பேச முடியுமா அவரால்?
வழக்கம் போல சிரித்த கடவுள்
பழக்கமில்லாத பதில் தர ஆரம்பித்தார்
“மகனே
நன்றாக பேசுகிறாய் -சிலசமயம்
நல்லதையும் பேசு- பலரால் முடியாதது அது
இறகுகளால் ஆனதல்ல உன் சிறகுகள்
இதயத்தால் ஆனது. -
சுவர் கொண்டு அடைக்கப்பட்டிருந்தாலும்
மடை திறப்பது போல பொழியும் நாக்கு
ஒரு சிறகல்லவா?
நினைத்த மாத்திரத்தில்
நினையாத தூரம் செல்லும்
நினைவலைகளுக்கு நான் தராத சிறகா?
பகைமை களைந்து பகுத்தறிகிற போது
நீ உச்சமாகிறாய்- படைப்பபுக்கெல்லாம்
விழுந்தாலும் தடுமாறி எழுந்திருக்கும்
இலட்சிய வேட்கை தோன்றும்
நல்மனம் இருக்கும் நீ உயர்வல்லவா?
அழகு வாய் திறந்து பழகு மொழி பேசினார் கடவுள்
சிரித்து வைத்தேன் சிந்திக்க முடியாமல்.
குதூகலத்தைத் தருகிறது எப்போதும்
படைத்தவனிடம் விடை கேட்பது
பலமடங்கு மகிழ்ச்சித் தருகிறது.
கடவுள் பேசிக்கொண்டிருந்த
கடந்தக் காலங்களில் ஒருநாள்
“இறைவா ,
படைப்பின் உச்சமென்றாய் என்னை
படைத்தது எல்லாம் எனக்கேயென்றாய்
கேட்பதற்கு நன்றாய் இருந்தது- கதைதானே
கேட்டும் வைத்தேன் மகிழ்வோடு - ஆனால்
கேள்வி ஒன்று துளைக்கிறது இன்று.
சிறப்புகள் பல பெற்ற எங்களால்
பறக்க முடியவில்லையே ?
சிட்டுக் குருவி என்னைப்பார்த்து
சிரித்துவிட்டு போகிறது அய்யா”
கேட்டு வைத்தேன் இந்த கேள்வியை
பதில் பேச முடியுமா அவரால்?
வழக்கம் போல சிரித்த கடவுள்
பழக்கமில்லாத பதில் தர ஆரம்பித்தார்
“மகனே
நன்றாக பேசுகிறாய் -சிலசமயம்
நல்லதையும் பேசு- பலரால் முடியாதது அது
இறகுகளால் ஆனதல்ல உன் சிறகுகள்
இதயத்தால் ஆனது. -
சுவர் கொண்டு அடைக்கப்பட்டிருந்தாலும்
மடை திறப்பது போல பொழியும் நாக்கு
ஒரு சிறகல்லவா?
நினைத்த மாத்திரத்தில்
நினையாத தூரம் செல்லும்
நினைவலைகளுக்கு நான் தராத சிறகா?
பகைமை களைந்து பகுத்தறிகிற போது
நீ உச்சமாகிறாய்- படைப்பபுக்கெல்லாம்
விழுந்தாலும் தடுமாறி எழுந்திருக்கும்
இலட்சிய வேட்கை தோன்றும்
நல்மனம் இருக்கும் நீ உயர்வல்லவா?
அழகு வாய் திறந்து பழகு மொழி பேசினார் கடவுள்
சிரித்து வைத்தேன் சிந்திக்க முடியாமல்.
